Latestnews: 4 கிலோ கஞ்சா! வாகனத்துடன் ஒருவர் கைது!!!
tamil news: கிளிநொச்சியில் நேற்று(26.01.2024) வெள்ளிக்கிழமை 4Kg கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதாவது,
கிளிநொச்சியிலிருந்து கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து புலனாய்வு பிரிவினருடன் இணைந்து கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினரும், அவர்களது புலனாய்வு பிரிவினரும் போதைப்பொருள் கொண்டு சென்ற வாகனத்தை பின்தொடர்ந்தனர்.
பின்தொடர்ந்த நிலையில் குறித்த வாகனம் முறிகண்டி பகுதியிலுள்ள வசந்தநகர் பிரதான வீதியில் திரும்பியுள்ளது.
உடனடியாக வாகனத்தை இடைமறித்து சோதனையிட்ட அதிரடிப்படை வாகன சாரதி உட்பட இருவர் தப்பிச்சென்றதாக கூறப்படும் நிலையில் வாகனத்தில் இருந்த மேலுமொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாகனத்தை சோதனையிட்ட போது, இரகசியமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட 2 கஞ்சா பொதிகளையும் மீட்டுள்ளனர்.
குறித்த கஞ்சா சுமார் 4Kg இற்கும் அதிக எடை கொண்டது என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கஞ்சா பொதியையும், கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும், கைதான சந்தேகநபரையும் மாங்குளம் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
*இலங்கையில் வெளியாகும் உறுதிப்படுத்தப்பட்ட முக்கியமான செய்திகளை மாத்திரம் *நரன் Media network* ஊடாக உடனுக்குடன் தினம்தோறும் பெற்றுக்கொள்கின்றீர்கள்...*


.png)