ரஷ்யஇராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி!
tamil news: ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 2025 ஜனவரி 20ம் திகதி வரையில் சுமார் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(07.02.2025) பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று(07.02.2025) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
மேலும்,
ரஷ்ய இராணுவத்தில் சுமார் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் நாட்டிலுள்ள அவர்களில் உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திகொடுக்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.