மட்டக்களப்பு: யானையை கண்ட 2 பிள்ளைகளின் தந்தை செய்த செயல் - பறிபோன உயிர்!!!
tamil news: மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காவற்துறை பிரிவிற்குட்பட்ட பன்சேனை அடைச்சல் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்றையதினம்(03.02.2025) அதிகாலை 2.00 மணியளவில் முதலைகுடாவைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான சோமசுந்தரம் சீராளசிங்கம் என்பவர் வயலுக்கு காவலுக்கு சென்றுள்ளார்.
அவ்வாறு சென்றபோது காட்டு யானையொன்று துரத்தியுள்ளது.
இதனையடுத்து யானைக்குப் பயந்து ஓடியதில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்குண்டு குறித்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்றிருந்த விவசாயிகயே இதனை காவற்துறைக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.