எலிக்காய்ச்சல்: இணைந்த விழிப்புணர்வு நடைபயணம் நேற்று!
tamil news: நேற்றையதினம்(31.01.2025) எலிக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நடைபயணம் மத்தியமுகாம் நகர் பிரதேசசெயலக பகுதியில் இடம்பெற்றது.
குறித்த நடைபயணமானது சமுர்த்தி வங்கிக்கு அருகில் ஆரம்பமாகி மத்தியமுகாம் நகர் பிரதேசவைத்தியசாலையில் எலிக்காய்ச்சல் தொடர்பிலான விழிப்புணர்வு உரையுடன் நிறைவுற்றது.
இந்நிகழ்வினை நாவிதன்வெளி பிரதேசசெயலகத்தின் அனுசரணையுடன் நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முன்னெடுத்திருந்தது.
இதன்போது நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஐ. எம். முஜீப்,
நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் திரு. பீ. சதீஸ்கரன்,
மத்திய முகாம் பிரதேசவைத்தியசாலையின் மாவட்டவைத்திய அதிகாரி டாக்டர் இசுரு கொடிகார,
நாவிதன்வெளி பிரதேச செயலக அதிகாரிகள்,
மத்தியமுகாம் ஜீ. எம். எம். எஸ். பாடசாலை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்கள்,
மத்தியமுகாம் காவற்துறை நிலையத்தில் கடமையாற்றும் காவற்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களுமாக பங்குபற்றினர்.
மேலும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கருத்து தெளிவூட்டல் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.