தலைமன்னார் கடற்பரப்பில் கைதான தமிழ் மீனவர்களுக்கு விளக்கமறியல்!
tamil news: இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி 17 தமிழ் மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்றையதினம்(31.01.2025) உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிநுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக 17 தமிழ் மீனவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி அதிகாலை தலைமன்னார் பகுதியில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
குறித்த மீனவர்களின் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே, மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதவான் இவர்களை எதிர்வரும் 7ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத இழுவை மடிவலைகளை பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிங்கள கடற்படையினரால் அர்கின் 2 ரோலர் படகுகள் உட்பட 17 மீனவர்களையும் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.