பாம்பன் பாலம் திறப்பு! வெளியான புதிய தகவல்
tamil news: இராமேஸ்வரத்தில் கட்டப்பட்ட புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்தநிலையில் அதன் திறப்பு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இராமேஸ்வரத்தின் முக்கிய அடையாளமான பாம்பன் பாலம் பழுதடைந்தநிலையில் அதன் அருகிலே புதிய பாம்பன் கட்டப்பட்டுள்ளது.
சுமார் 45 கோடி செலவில் செங்குத்து வடிவில் திறந்துமூடக்கூடிய அமைப்புடன், பழைய பாம்பன் பாலத்தின் சிறப்புகளுடனே இந்த புதிய பாலமும் கட்டப்பட்டுள்ளமை சிறப்பாகும்.
தொடர்ந்து புதிய பாலத்தின் மீது ரயில் இயந்திரங்களை விட்டு சோதனை நடத்தப்பட்டநிலையில்,
இன்று கடலோர காவற்படையின் கப்பல் ஒன்றை பாம்பன் பாலத்தின் குறுக்கேவிட்டு அதன் திறந்துமூடும் அமைப்புமுறையை சோதனை செய்யவுள்ளனர்.
புதிய பாம்பன் பாலம் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு,
அடுத்த மாதத்தில் தைப்பூசநாளிலோ அல்லது அதற்கு முந்தைய தினத்திலோ பாலம் திறக்கப்படலாம் என்றும்,
புதிய பாலத்தை இந்திய பிரதமர் மோடி நேரில்வந்து திறந்துவைக்கவுள்ளதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.