வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

மட்டக்களப்பு: கடலில் குளிக்கச்சென்ற மாணவன் சடலமாக மீட்பு!


tamil news: காத்தான்குடி கடலில் நேற்றையதினம்(08.02.2025) சனிக்கிழமை மாலை நீராடிக்கொண்டிருந்த மாணவன் ஒருவன் கடலில் மூழ்கி காணாமற்போன நிலையில் சற்றுமுன் சடலமாக மீட்கப்படுள்ளார்.


காத்தான்குடி நதியா கடற்கரையில் 5 மாணவர்கள் நீராடிக்கொண்டிருந்த நிலையில் ஒரு மாணவன் கடலில் மூழ்கியுள்ளதுடன் ஏனைய 4 மாணவர்களும் தப்பியுள்ளனர்.


காத்தான்குடி ஏ.எல்.எஸ்.மாவத்தை முதலாம் குறுக்குவீதியைச் சேர்ந்த முகம்மது ரமீஸ் முகம்மது சனாகி(வயது 16) எனும் மாணவனே இவ்வாறு காணாமற்போயுள்ளார்.



காத்தான்குடி நூறானியா வித்தியாலயத்தில் தரம் 11 இல் இந்த மாணவர் கல்வி கற்றுவரும் நிலையில் சக மாணவர்களுடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த போது கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கடல் கொந்தளிப்பாக காணப்படுகின்றநிலையில் குறித்த மாணவனை தேடும்பணி மிகவும் சிரமமாக இடம்பெற்று வந்தநிலையில் சற்றுமுன் பூநொச்சிமுனையில் சடலமாக மீட்கப்படுள்ளார்.

இது தொடர்பாக காத்தான்குடி காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.