உணவுக்காப்பு சட்டங்களை மீறிய விநியோகஸ்தருக்கு அபராதம்!!!
tamil news:
யாழ்ப்பாணம் பகுதியில் உணவுப் பாதுகாப்பு விதிகளை புறக்கணித்து உரிய வெப்ப நிலையை பராமரிக்காமல் யோகேட்டுகளை வாகனத்தில் கொண்டுசென்ற சாரதிக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் ரூ.30,000 அபராதம் விதித்தது.
மேலும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அழிக்கப்படவேண்டும் எனவும் உத்தரவிட்டது.
சம்பவத்தின்போது 6 செல்சியஸ் வெப்பநிலை தேவையான நிலையில் இருந்தும், 18 செல்சியஸ் வெப்பநிலையில் யோகேட்டுகளை கடைகளுக்கு விநியோகிக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத்தொடர்ந்து அராலி பகுதியில் செயற்படும் பொதுச்சுகாதார பரிசோதகர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
விசாரணைக்குத் தொடர்பில் சாரதி தனது தவறை ஏற்றுக்கொண்டநிலையில் நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கையுடன் அபராதம் விதித்ததோடு சுமார் 200 யோகேட்டுப்பைக்கற்றுகளையும் அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.