இந்தியாவுடன் கைச்சாத்தான பாதுகாப்பு ஒப்பந்தம்!!! இனப்படுகொலையாளியின் வாரிசு கேள்வி
tamil news:
இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் தெளிவான விளக்கங்களை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
வெலிமடை பகுதியில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர்,
இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்கள் எமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்றும்,
அதனை வெளிப்படுத்த இந்தியாவின் அனுமதி தேவைப்படுகின்றதாக அரசாங்கம் கூறுவதாகவும் தெரிவித்தார்.
"159 அரசாங்க எம்.பிக்களுக்கும் அறிவிக்கப்படாமலே இந்த ஒப்பந்தம் இந்தியாவுடன் கைச்சாத்தாகியுள்ளது,"
என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் தேசிய பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் அரசாங்கத்தின் காலப்பகுதியில் தங்கள் கட்சியின் ஒரு உறுப்பினர் கொல்லப்பட்டதோடு,
மற்றொரு உறுப்பினர் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.