இராமநாதன் மகளிர் கல்லூரி முன்பு பரபரப்பு – நீதி கோரிய மக்கள் பேரணியில் குழப்பம்!!!
tamil news:
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் உயிரிழந்த டில்ஷி அம்ஷிகாவிற்கு நீதி கோரிய பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இணைந்த மாபெரும் பேரணியில் இன்றையதினம்(08.05.2025) பதற்றநிலை ஏற்பட்டது.
பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள இராமநாதன் மத்திய மகளிர் கல்லூரியை ஆரம்பக் கட்டமாகக் கொண்டு,
கொட்டாஞ்சேனை நோக்கி முன்னேறிய போராட்டம் எதிர்பாராத முறையில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
போராட்டத்தில் பங்கேற்ற சிலர் சம்பவம் தொடர்பான பாடசாலையை குறிப்பிட வேண்டாம் எனக் கோரியதையடுத்து,
அவர்களுக்கும் மற்ற போராளிகளுக்கும் இடையில் விவாதம் ஏற்பட்டு நிலைமை சற்று பரபரப்பாக மாறியது.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த காவற்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள தயாராகியுள்ளனர் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்ட இந்த அமைதியான எதிர்ப்புப் பேரணி,
அம்ஷிகாவிற்கு உரிய நீதியை உறுதி செய்யும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

