வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த பதிலடி: தலைமை வகித்த இந்திய பெண் அதிகாரிகள்


tamil news:

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், இந்தியா "ஒபரேஷன் சிந்தூர்" என்ற இராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.


இந்த அதிரடி நடவடிக்கையை இரண்டு முக்கிய பெண் அதிகாரிகளான கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் தலைமையிலேயே மேற்கொண்டதாக இந்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.


இதன் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்த 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.


இதில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் 4, லஷ்கர்-இ-தொய்பாவின் 3 மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 இலக்குகள் உள்ளடங்குகின்றன.


இந்த நடவடிக்கையில் பாகிஸ்தான் இராணுவ அமைப்புக்கள் குறிவைக்கப்படவில்லை என்றும்,

குறைந்தபட்ச பாதிப்புகளுடன் பயங்கரவாதத்திற்கு எதிரான துல்லியமான நடவடிக்கையாக இது அமைகின்றது எனவும் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.


ஒபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாட்டுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களுக்கு விளக்கம் வழங்கினர்.


இந்தத் திட்டத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகித்தது குறித்து கேள்வி எழுந்தபோது, பஹல்காம் தாக்குதலின் போது பயங்கரவாதிகள்,

"பெண்களை கொல்ல மாட்டோம்; பிரதமரிடம் இதை கூறுங்கள்"

என தெரிவித்ததாக கூறப்பட்டது.


இதனைக் கண்டித்து இந்தியா பெண் அதிகாரிகளை முன்னிறுத்தி பதிலடி கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


கர்னல் சோபியா குரேஷி

வதோதராவைச் சேர்ந்தவர்.


ஆசிரியர் பணியை விட்டு இராணுவத்தில் சேர்ந்த இவர்,

இந்திய ராணுவப் படையை பன்னாட்டு பயிற்சியில் வழிநடத்திய முதல் பெண் அதிகாரியாகும்.


2006-ம் ஆண்டு ஐ.நா. அமைதிப் படையிலும்,

2016-ம் ஆண்டு போர்ஸ் 18 கூட்டுப் பயிற்சியிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.


வியோமிகா சிங்

வானில் பறப்பதை கனவாகக் கொண்டிருந்த இவர்,

2019-ம் ஆண்டு விமானப் படையில் இணைந்தார்.


2,500 மணிநேரத்துக்கும் மேல் ஹெலிகாப்டர் இயக்க அனுபவமுள்ள இவர்,

காஷ்மீர் முதல் வடகிழக்கு பகுதிகள் வரை பல சவாலான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.


2020-ம் ஆண்டு அருணாசலின் இயற்கை பேரழிவுகளின்போது மீட்புப் பணியில் முக்கிய பங்காற்றியவர்.


இந்த நடவடிக்கை இந்திய ராணுவத்தில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றிருப்பதை காட்டும் சிறந்த எடுத்துக்காட்டு என பார்க்கப்படுகின்றது.