வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

வடக்கு மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி அரசின் தோல்விக்கு காரணம் என்ன? – விக்னேஸ்வரன் விளக்கம்


tamil news:

உள்ளூராட்சி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசு வடக்கில் எதிர்பாராத வகையில் தோல்வியை சந்தித்தமையானது முன்னதாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையே முக்கியக் காரணமாகும் என வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


அவர் கூறுகையில்,

"மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பலதும் நடைமுறையில் காற்றில் கரைந்தன.


சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டாலும் அவர்கள் இன்னமும் சிறையிலேயே உள்ளனர்.


நிலங்கள் மீட்பதாக கூறப்பட்டும் அவை இன்னும் அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.


இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதிலும் இன்று முல்லைத்தீவில் 2 பொதுமக்களுக்கு ஒருவர் என்ற அளவில் இராணுவம் உள்ளது."

என தெரிவித்தார்.


மேலும்,

"தமிழ் மக்களும் அரசியல் கட்சிகளும் கடந்த தேர்தல்களில் ஏற்பட்ட அனுபவங்களின் பேரில் இந்தமுறை விழிப்புடன் வாக்களித்தனர்.


கடந்தமுறை தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்ட குழப்பம் அரசுக்கு ஓரளவு ஆதாயமாக இருந்தது.


ஆனால் இம்முறை மக்கள் பழைய ஆட்சி முறையிலிருந்து வேறுபட்ட பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர்."

எனக் குறிப்பிட்டார்.


மேலும் அவர் கூறியதாவது,

"நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் 12,000 மில்லியன் ரூபாய் நிதி கோரப்பட்டது.


ஆனால் வெறும் 1,600 மில்லியன் ரூபாயே வழங்கப்பட்டது.


இது சிங்கள பெரும்பான்மை அரசாங்கம் தமிழர்களை இரண்டாம் நிலைப் புறக்கணிப்பில் வைக்கின்றதற்கான சான்றாகும்.


வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கும் சிங்கள மக்களுடன் நல்ல உறவுகள் உள்ளன.


ஆனால் அதற்கூட அரசியல் உரிமைகள் கைவிடப்படவே கூடாது.


எங்களுக்கான உரிமைகளை நாங்கள் கோருகின்றோம்.


அதனாலேயே இந்தத் தேர்தலில் மக்கள் தமிழ் கட்சிகளை தேர்ந்தெடுத்துள்ளனர்"

எனவும் அவர் வலியுறுத்தினார்.