இலங்கை வீரர்களுக்கு சிறப்பு பயிற்சியை வழங்கும் இந்திய பயிற்சியாளர்!
tamil news:
இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் 2025 ஆம் ஆண்டின் ஜூன் 2ம் திகதியில் இருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்காக 14 நாட்கள் அடங்கிய ஒரு சிறப்பு பயிற்சி முகாமை நடத்தவுள்ளார்.
இந்த பயிற்சி முகாம் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்காக நடைபெற உள்ளது.
இதில் இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர்களும் பங்கேற்று பரத் அருணுக்கு உதவ முறைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய பயிற்சியாளர் ஒருவர் இலங்கை அணிகளுக்குப் பயிற்சி வழங்குவது இது புதிதல்ல.
இதற்கு முன்பும் ஆர்.ஸ்ரீதர் இலங்கை வீரர்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்தியுள்ளார்.
62 வயதான பரத் அருண், இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Labels:
விளையாட்டு செய்திகள்