வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சனை! வவுனியாவில் இருதரப்பு பேச்சுவார்த்தை


tamil news:

இலங்கை, இந்திய மீனவர் சங்க தலைவர்களுக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை வவுனியா, கொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்றையதினம்(26.03.2025) காலைவேளையில் ஆரம்பமாகியது.


வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்சிஸ் தலைமையில் இடம்பெற்றுவரும் இந்த பேச்சுவார்த்தையில்,

இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையிலான முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது.


குறித்த பேச்சுவார்த்தையில் அனைத்து இந்திய விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பிஜே சுராஜா,

இராமேஸ்வரம் பாரம்பரிய விசைப்படகு மீனவ சங்கத்தைச் சேர்ந்த ஆல்வின் பெர்னாண்டோ,

மண்டபம் விசைப்படகு மீனவர் சங்கத்தைச் சேர்ந்த இருதய ராஜா ஜாஸ்டின்,

தங்கச்சிமடம் விசைப்படகு மீனவர் சங்கத்தைச் சேர்ந்த ஜெருசிமான்ஸ்,

பாம்பன் விசைப்படகு மீனவர் சங்கத்தைச் சேர்ந்த ராஜப்பெண்ணு சகாயம் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.


இலங்கை மீனவர்சங்க பிரதிநிதிகள் சார்பாக வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்சிஸ்,

செயலாளர் முகமத ஆளம்,

ஊடகப்பேச்சாளர் அன்னராசா,

செயற்குழு உறுப்பினர் பி சுப்பிரமணியம்,

பிரதிச்செயலாளர் கே ரீட்டா வசந்தி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


அதேவேளை குறித்த கலந்துரையாடலானது மீனவர்கள் இல்லாத வவனியாவில் இடம்பெற்றுவருவதும்,

இதில் பெரும்பான்மையான கடற்தொழிலாளர் அமைப்புகளின் தலைவர்கள் அழைக்கப்படாமல் கலந்துரைடல் இடம்பெற்றுவருவதும் ஏனைய மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளை வருத்தமும் விசனமும் தெரிவிக்க வைத்துள்ளது.