யாழ் வந்த முதியவர் கைது: அகதி முகாமில் தங்கியிருந்ததாக தகவல்!!!
tamil news:
இந்தியாவில் அகதி முகாமில் பல ஆண்டுகளாக தங்கியிருந்த 75 வயது முதியவர், நேற்றையதினம்(29.05.2025) யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் மூலம் நாடு திரும்பிய நிலையில் விமான நிலையத்தில் அவரை குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து இன்றையதினம்(30.05.2025) அவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியபின்,
வருகின்ற ஜூன் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரிடம் நாடு திரும்புவதற்கான தேவையான ஆவணங்கள் இருந்ததாகவும்,
அவர் சர்வதேச சட்டப்படி அகதி என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், நீதிமன்றம் பிணை மனுவை நிராகரித்ததால் அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர் யுத்தகாலத்தில் உயிரை காக்கும் முயற்சியில்,
1987ஆம் ஆண்டுகளில் படகில் தமிழகத்துக்கு தப்பிச் சென்றுள்ளார்.
அதன் பின்னர் திருவண்ணாமலை அகதி முகாமில் தங்கி, தற்போது யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் வசிக்கும் தனது மகனுடன் வாழ்வதற்காக நாடு திரும்ப முடிவு செய்துள்ளார்.
ஆனால் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்மட்ட ஆணையத்துடன் (யு.என்.எச்.சி.ஆர்) பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில்,
அவர் விமான நிலையம் வந்ததும் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் நாடு திரும்பும் பிற அகதிகள் மீதும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என எதிர்பார்க்கும் அச்சத்தை கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.