பணிப்பெண்ணிடம் தவறாக நடத்த நபர்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
tamil news:
எமிரேட்ஸ் விமான பணிப்பெண்ணை தொந்தரவு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கப்பல் மாலுமி கனகசபாபதி குஷாந்தன் என்பவரை எதிர்வரும் ஜூன் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று உத்தரவிட்டுள்ளார்.
அதாவது கனகசபாபதி குஷாந்தன், டுபாயில் இருந்து திரும்பும் விமானத்தில் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்ணை தவறாக தொந்தரவு செய்தார் என விமானநிலைய காவற்துறையினர் நீதிமன்றத்தில் தகவல் வழங்கினர்.
இதனடிப்படையில் விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்ட குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை பெற்றதால்,
நீதிமன்றம் வழக்கை தீவிரமாக ஆய்வு செய்து சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்குப் பிறகு இந்த வழக்கு ஜூன் 5ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதவான் தெரிவித்துள்ளார்.