அதிரடியில் அநுர அரசு – தொடரும் கைதுகள்!
tamil news:
நாடு முழுவதும் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் கூறியதாவது,
"தேசிய மக்கள் சக்தியில் பதவி, பட்டங்களை நாடி வரும் யாரும் இல்லை.
கட்சி தானாகவே பதவிகளை வழங்கும்.
நம் பங்களிப்பும், பொறுப்பும் உணர்ந்து செயற்படுகிறோம்."
என அவர் கூறினார்.
மேலும்,
"அதன்போல் சட்டத்தின் கீழேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இது ஜனநாயகத்தில் நம் பங்கை வெளிப்படுத்தும்.
இங்கு எந்தக் குழப்பமும் ஏற்படாது.
சில முக்கியமான நபர்கள், அதாவது மேர்வின் சில்வா, கெஹலிய ரம்புக்வெல மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோர் தற்போதும் சிறையில் உள்ளனர்.
சட்டம் தன்னிச்சையாகச் செயல்படாது. அது முறையாகப் பின்பற்றப்படுகின்றது.
குற்றவாளிகள் சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்படுவார்கள்."
என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஆனால் மேர்வின் சில்வா, கெஹலிய ரம்புக்வெல மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோரின் வழக்குகள் ஜேவிபி அரசினால் போடப்பட்ட வழக்குகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.