பருத்தித்துறை வைத்தியசாலையில் அதிதீவிரசிகிச்சை பிரிவு திறப்பு!
tamil news: பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மீள்நிர்மாணம் செய்யப்பட்ட அதிதீவிர சிசு பராமரிப்பு சிகிச்சைப்பிரிவு இன்றையதினம்(30.01.2025) திறந்துவைக்கப்பட்டது.
பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலை அத்தியட்சகர் தலைமையில் இன்று காலை 9 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு குறித்த சிசு அதிதீவிர சிகிச்சை பிரிவை திறந்துவைத்தார்.
இந்த சிகிச்சை பிரிவானது இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளினுள் மிகப்பெரிய கட்டட வசதிகளுடன் கூடிய தாய்மார்களும், தங்கியிருக்ககூடிய அதிசொகுசு சேவைகளை கொண்ட கட்டடமாகும் என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்

