"மாவை ஒரு தமிழ்த்தேசிய அடையாளம்" மனோகணேசன் இரங்கல் செய்தி
tamil news:
"நீண்டகாலமாக தமிழர் சனநாயக சாலையில் பயணித்த வாகனம் நின்றுவிட்டது."
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினராக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
மாவை சேனாதிராசா காலமானதையடுத்து மனோகணேசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகைமைகளுக்கு அப்பால் அண்ணன் மாவை, ஒரு தமிழ்த்தேசிய அடையாளம் என்பது நிதர்சனம்.
மிக நீண்டகாலமாக தமிழர் சனநாயக சாலையில் பயணித்த வாகனம் நின்றுவிட்ட சம்பவம் நிகழ்ந்துவிட்டது.
பல உணர்வுமிக்க தரிப்பிடங்களை அவருடன் கடந்து நான் பயணித்துள்ளேன்.
இந்த சோகத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் பங்குகொள்கின்றோம்."
என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்

