2021ம் ஆண்டில் காணாமற்போன T56 துப்பாக்கியை 2025 இல் கண்டுபிடித்தனர்! கடற்படை வீரர் கைது
tamil news:
இன்று(16.02.2025) அதிகாலை இலுகேன பகுதியிலுள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட கடற்படையினரும் குளியாபிட்டிய காவற்துறையினரும் இணைந்து நடத்திய விசேடசோதனையில் கடற்படை வீரர் ஒருவர் T56 துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சோதனை கல்பொலா காலனியில் அமைந்துள்ள வீடொன்றில் நடத்தப்பட்டபோது,
2021ம் ஆண்டு கொழும்பு துறைமுகத்திலுள்ள ரண்வல முகாமின் ஆயுதக் களஞ்சியத்திலிருந்து மாயமானதாகக் கூறப்படும் T56 துப்பாக்கி மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குறித்த முகாமில் இந்த கைதான கடற்படை வீரர் பொறுப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கைதுசெய்யப்பட்ட கடற்படை வீரர் மேலும் விசாரணைக்காக வெலிசர கடற்படை முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்ட பின்னர்,
மேலதிக விசாரணைக்காக குளியாபிட்டிய காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்
