யாழில் வீடொன்றில் நகைகளை திருடிய 4 இளைஞர்கள் கைது!
tamil news: யாழ்ப்பாணம், திருநெல்வேலி பாரதிபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் நகைகளை திருடிய குற்றத்தில் 4 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 03ம் திகதி வீடொன்றில் நகைகள் திருடப்பட்டதாக கோப்பாய் காவற்துறை பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் நேற்றையதினம்(07.02.2025) குறித்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து ஒரு தொகை நகைகள் மற்றும் பணம் என்பவை மீட்கப்பட்டுள்ளதுடன் 2 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை காவற்துறை நிலையத்தில் தடுத்துவைத்து காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்