கடற்படை விடுதியில் வெடித்தது - இருவர் படுகாயம்!!!
tamil news:
இன்றையதினம்(11.02.2025) செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் கதிர்காமம் கடற்படை விடுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அதாவது அங்கிருந்த எரிவாயு கொள்கலன் வெடித்ததில் அங்கு தங்கியிருந்த மாத்தறை கேகனதுர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரும், 36 வயதுடைய ஆண் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.
காலை உணவு தயாரிப்பதற்காக சென்றபோதே இந்த எரிவாயு கொள்கலன் வெடித்து சிதறியதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் கதிர்காமம் பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் மேலதிக சிகிச்சைக்காக திஸ்ஸமஹாராம தெபரவெவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்
