குடியிருப்பாளரை மிரட்டியதாக JVP உறுப்பினருக்கு எதிராக குற்றச்சாட்டு! (காணொளி)
tamil news:
மாத்தளை, யதவட்டா பகுதியில் குடியிருப்பாளரை மிரட்டியதாக தற்போது ஆட்சியிலுள்ள உறுப்பினருக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
அதாவது மாத்தளை யதவட்டாவில், முன்னாள் உள்ளூராட்சி கவுன்சிலர் டபிள்யூ. ஜி. மஞ்சுலா பிரசாத் சமரவீர உட்பட ஜே.வி.பி (JVP) உறுப்பினர்கள் சிலர்,
அமல் ரத்நாயக்க என்பவரை அவரது வீட்டில் மிரட்டியதாக சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் 22 நிமிடங்கள் நீடித்ததாகவும், அதற்கான காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சமூக ஊடகங்கள் மூலம் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த மக்களுக்கு உரிமை உள்ளது எனக் கவிரத்ன வலியுறுத்தியதுடன்,
உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகள் மீதான அழுத்தங்களை கண்டிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதுள்ள JVP அரசில் பிரதமராக ஒரு பெண் உள்ளநிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்
