வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

விசுவமடுவை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது!


tamil news:

புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனைசெய்த 2 இளைஞர்கள் புதுக்குடியிருப்பு காவற்துறையினரால் நேற்று வெள்ளிக்கிழமை(28.02.2025) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனைசெய்யப்படுவதாக புதுக்குடியிருப்பு காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து,

புதுக்குடியிருப்பு காவற்துறை நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தபோது இளைஞர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


விசுவமடு பகுதியை சேர்ந்த 21, 26 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 55 லீற்றர் கசிப்பு காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.


சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணையின் பின்னர் சனிக்கிழமை(01.03.2025) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.