O/Level பரீட்சை: 11ஆம் திகதி முதல் தனியார் வகுப்புகளுக்கு தடை!
tamil news: 2024 (2025) பொதுத்தராதர பரீட்சையை எழுதவுள்ள மாணவர்களுக்கான தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள், செய்முறைக் கருத்தரங்குகள் மற்றும் நிகரநிலை வகுப்புக்கள் என்பன வரும் மார்ச் 11ஆம் திகதி(செவ்வாய்க்கிழமை) முதல் முடிவடையும்.
பரீட்சைகள் திணைக்களம் அறிவித்ததின்படி,
இந்த தடை 2025 மார்ச் 11ஆம் திகதி நடுராத்திரியிலிருந்து பரீட்சை முடியும்வரை தொடரும்.
2024(2025) O/Level பரீட்சை மார்ச் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை 3663 பரீட்சை மையங்களில் நடைபெற உள்ளது. இவ்வருடம் 474,147 மாணவர்கள் பரீட்சைக்கு தோன்றுவார்கள்.
பரீட்சைகள் ஆணையாளர் ஜனரல் அமித் ஜெயசுந்தர தெரிவித்ததாவது,
பரீட்சை அனுமதி அட்டைகள் மாணவர்களுக்கு வழங்க ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
மேலும், அதில் மாற்றங்கள் தேவையானவர்கள் 2025 மார்ச் 10ஆம் தேதிக்குள் பரீட்சை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.doenets.lk மூலமாக திருத்தம் செய்யலாம்.

