வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 2 வயது ஈழத்துச் சிறுமி!


tamil news:

மட்டக்களப்பு – கொம்மாந்துறை பகுதியை சேர்ந்த 2 வயதும் 10 மாதங்களும் கொண்ட கிஷன்ராஜ் தன்யஸ்ரீ என்ற சிறுமி உலகின் 195 நாடுகளின் தலைநகரங்களை 5 நிமிடங்கள் 24 வினாடிகளில் கண்டறிந்து கூறி,

“சோழன் உலக சாதனை புத்தகம்” (Cholan World Record Book)

இல் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.


இச்சாதனை நிகழ்வு கடந்த சனிக்கிழமை(17.05.2025) மட்டக்களப்பில் உள்ள கிறீன் கார்டன் ஹோட்டலில் நடைபெற்றது.


மக்கள் உதவிகள் மக்கள் பவுண்டேசனின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில்,

சோழன் உலக சாதனை புத்தகத்தின் இலங்கை கிளையின் செயலாளர் திரு. கதிரவன் ரி. இன்பராசா தலைமையிலேயே இந்த சாதனை பதிவு செய்யப்பட்டது.


சிறுமிக்கு பாராட்டு – பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கல்

சாதனையை அங்கீகரிக்கும் விதமாக சிறுமி தன்யஸ்ரீக்கு பதக்கம், வெற்றி கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் திரு. நா. தனஞ்சயன் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டார்.


மேலும் செங்கலடி மத்திய மாவித்தியாலய அதிபர் க. சிவயேஸ்வரன், கல்குடா கல்வி ஆலோசகர் சுகந்தி நிறஞ்சன் ஆகியோர் உட்பட பலர் சிறுமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


மிக குறைந்த வயதில் இந்தளவிலான உலக தகவல்களை துல்லியமாக கூறிய சிறுமியின் திறமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.