மழை தொடர்ந்து சீரற்ற நிலையில்; 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!!!
tamil news:
மழை சீரற்று தொடரும் நிலையில், நிலச்சரிவுக்கு வாய்ப்பு இருப்பதாக 5 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலி மாவட்டத்தில் பத்தேகம, கண்டி மாவட்டத்தில் கங்க இஹல மற்றும் கோரளை,
கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க,
நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ மற்றும் நோர்வுட்,
இரத்தினபுரி மாவட்டத்தில் கிரிஎல்ல ஆகிய பகுதிகள் இந்த எச்சரிக்கையில் இடம்பெறுகின்றன.
இந்த எச்சரிக்கை மஞ்சள்நிற முன்னெச்சரிக்கையாக வழங்கப்பட்டு, நேற்றையதினம்(30.05.2025) இரவு 9.00 மணி முதல் இன்றையதினம்(31.05.2025) இரவு 9.00 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு பின்பற்ற வேண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் சீரற்ற வானிலையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கவனமாக எதிர்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.