பிள்ளையானின் கோட்டையில் வெற்றிபெற்ற வைத்தியர் ஸ்ரீநாத்!
tamil news:
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்று அதன் முடிவுகள் நேற்றையதினம்(07.05.2025) வெளியாகியிருந்தநிலையில்,
வைத்தியர் ஸ்ரீநாத் அவர்களுடைய வெற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதேவேளை கடந்த இரண்டு தேர்தல்களிலும் பொருளாதார நெருக்கடியை முன்வைத்து தேசிய மக்கள் சக்தி(NPP) தென்னிலங்கையில் பெரும்பாலான இடங்களில் வெற்றியை பெற்றிருந்தது.
அந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் அவர்கள் தங்களது வலிமையை எடுத்துச் சொல்ல முயற்சித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவிலான பெரும்பான்மையைப் பெற முடியவில்லை.
இந்நிலையில் தமிழரின் தாயகமான வடகிழக்குப் பிராந்தியத்தில்,
குறிப்பாக மட்டக்களப்பில் சாணக்கியன் முன்னின்று பரிந்துரைத்த வேட்பாளர்களில் சுமார் 40% பேர் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர்.
இவ்வாறு மற்றவர்களுடன் ஒப்பிடுகையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் மற்றும் வைத்தியர் ஸ்ரீநாத் ஆகியோருக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருந்தபோதும்,
வைத்தியர் ஸ்ரீநாத், பிள்ளையானின் கோட்டையில் தேர்தலில் வெற்றிபெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இதனைக் கூறிய மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர்,
"மக்கள் வழங்கிய வாக்கை நம்பிக்கையாகப் பாவித்து, புதிய பொறுப்புகளை விடியலாக முன்னெடுக்க வேண்டும்"
எனவும் குறிப்பிட்டார்