போர் சூழ்நிலை தீவிரம்; முழுமையான போருக்கு தயார் நிலையில் பாகிஸ்தான்!!!
tamil news:
இந்தியாவின் சமீபத்திய நடவடிக்கைகள் இரு அண்டை நாடுகளுக்குமிடையில் எதிர்காலத்தில் பெரும் மோதலுக்குத் தானே வழிவகுக்கின்றன என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இதைத்தவிர்க்க இஸ்லாமாபாத் தலைமை முறையாக முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தாக்குதல் தேசிய பாதுகாப்பை உடைத்தது எனக் கூறியுள்ள அவர்,
இதன் காரணமாக பிராந்தியத்தில் நிலவும் பதட்டம் புதிய பரிணாமத்திற்குள் நுழையக்கூடும் எனவும் எச்சரிக்கின்றார்.
தெற்காசியாவின் ராணுவ ஆதிக்கம் அதிகமான பிரதேசங்களில் ஒன்றாக காணப்படும் இந்திய - பாகிஸ்தான் எல்லையில்,
பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகள் தற்போது முழுமையான போர் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தானின் பாதுகாப்புப்படைகள் சில இந்திய விமானங்களை தாக்கி வீழ்த்தியதாகவும்,
இது எதிர்பாராத தாக்கங்களை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவுக்கு ஒரு பதிலடி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல்களில் மூன்று விமானங்கள் சேதமடைந்ததைக் இந்தியா ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.