முல்லைத்தீவில் உள்ள அனைத்து பிரதேசசபைகளிலும் தமிழரசுக் கட்சிக்கு மக்கள்தீர்ப்பு!
tamil news:
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் முடிவுகள் முழுமையாக வெளியாகியுள்ளன.
இதில், தமிழரசுக் கட்சி பெரும்பான்மையான ஆதரவுடன் மாவட்டத்தின் முக்கிய பிரதேச சபைகளில் வெற்றிபெற்றுள்ளது.
மாந்தை கிழக்கு, துணுக்காய், புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று உள்ளிட்ட முக்கிய 4 பிரதேசசபைகளும் தற்போது தமிழரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் சென்றுள்ளன.
மொத்தமாக தமிழரசுக் கட்சி 20,080 வாக்குகளை பெற்று 26 ஆசனங்களை உறுதிசெய்துள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 7,628 வாக்குகளுடன் 10 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
துணுக்காய் பிரதேச சபை
தமிழரசுக் கட்சி – 1,594 வாக்குகள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,082
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 804
ஐக்கிய மக்கள் சக்தி – 605
தேசிய மக்கள் சக்தி – 492
ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 254
சுயேட்சை குழு – 388
கரைதுறைப்பற்று பிரதேச சபை
தமிழரசுக் கட்சி – 6,306
தேசிய மக்கள் சக்தி – 4,407
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 3,672
ஐக்கிய மக்கள் சக்தி – 1,962
சுயேட்சை குழு (2) – 1,392
இலங்கை தொழிலாளர் கட்சி – 624
ஐக்கிய தேசிய கூட்டணி – 548
புதுக்குடியிருப்பு பிரதேச சபை
தமிழரசுக் கட்சி – 10,816
தேசிய மக்கள் சக்தி – 4,028
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 2,652
சுயேட்சை குழு (1) – 2,491
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,174
மாந்தை கிழக்கு பிரதேச சபை
தமிழரசுக் கட்சி – 1,364
ஐக்கிய மக்கள் சக்தி – 990
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 808
தேசிய மக்கள் சக்தி – 607
இந்தத் தேர்தல் முடிவுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் கட்சி வலிமை தெளிவாக பிரதிபலிக்கின்றன.
எதிர்க்கட்சிகளும் குறிப்பிட்ட இடங்களில் வலுவாக தோன்றினாலும் மொத்த நிலையில் தமிழரசுக் கட்சி முன்னணியில் திகழ்கின்றது.