இனவழிப்பு குடும்பத்தின் முக்கிய பிரமுகர் கைதுக்கு சாத்தியம்?
tamil news:
இனவழிப்பு குடும்பமான ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதி ஒருவர் விரைவில் கைதுசெய்யப்படலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் இருந்து வெளியாகியுள்ளன.
கடந்த கோட்டாபய அரசாங்கத்தின் காலத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற உரம் தொடர்பான ஊழல் வழக்கில்,
சஷீந்திர ராஜபக்சவின் பெயர் தற்போது முக்கியமாக இடம்பெற்று வருகின்றது.
இதற்கான விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணைகள் தொடரும்நிலையில் அவர் கைதுசெய்யப்படக்கூடிய சாத்தியம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயும் தொடர்புடையவராகக் கருதப்படுவதால்,
அவரும் விசாரணையின் கீழ் உள்ளதாகவும்,
கைதுசெய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.