பாகிஸ்தானின் ட்ரோன் ஊடுருவல் – பாதுகாப்பு சூழ்நிலை தீவிரம்; ஐ.பி.எல் போட்டி திடீர் நிறுத்தம்!
tamil news:
இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வரும் சூழலில், இமாச்சலப் பிரதேசம் தர்மசாலா பகுதியில் ட்ரோன் ஊடுருவல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி இடைநிறுத்தப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பாதுகாப்பு காரணங்களால், வீரர்கள் மற்றும் ரசிகர்கள் உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தற்போதைய நிலைமைக்கு ஏற்ப, இந்த தீர்மானம் இந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் ஆலோசனையின் பேரிலேயே எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.