இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன் வழங்கியது IMF!!!
tamil news:
பாகிஸ்தானின் சிக்கலான பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியம்(IMF) சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதல் வோசிங்டனில் நேற்றையதினம்(09.05.2025) நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில் வழங்கப்பட்டது.
ஆனால் இந்திய அரசு பாகிஸ்தான் கடனினை பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் அபாயம் உள்ளதென தெரிவித்து,
முன்பே கடன் வழங்கவேண்டாம் என்று IMF வேண்டியுள்ளது.
எனினும் அந்த எதிர்ப்பை எடுத்துக்கொள்ளாமல்,
பாகிஸ்தானுக்கான கடன் உதவியை வழங்க IMF முடிவெடுத்துள்ளது.
பாகிஸ்தான் தனது வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை திருத்துவதற்காக இந்த கடனுக்கு விண்ணப்பித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த உதவிக்கு நன்றி தெரிவித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஐ.எம்.எப்புக்கு தனது நன்றியுணர்வை தெரிவித்தனர்.

