கொழும்பில் அடையாளந்தெரியாத ஆணின் சடலம் கண்டெடுப்பு!!!
tamil news:
கொழும்பு மாவட்டத்தில் அடையாளந்தெரியாத நிலையில் இருந்த ஆண் ஒருவரின் சடலம் நேற்றையதினம்(28.05.2025) மீட்கப்பட்டுள்ளது.
கஹதுடுவ காவற்துறை பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள சியம்பலாகொட பகுதியில் அமைந்துள்ள ஒரு வாவிக்கரையில் இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சடலம் இப்போது அடையாளம் காண்பதற்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கஹதுடுவ காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.