வருடாந்தம் ஒருவருக்கு 12Kg பிளாஸ்டிக் பயன்படுத்தும் இலங்கையர்!!!
tamil news:
ஒரு இலங்கையர் ஆண்டுக்கு சுமாராக 12 கிலோகிராம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகின்றதாக இலங்கை சுற்றாடல் தொடர்பான இராஜாங்க அமைச்சர் எட்வன் ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(29.05.2025) நடைபெறுகின்ற உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,
அரச தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இந்த சந்திப்பில் சுற்றாடல் அமைச்சர் டாக்டர் தம்மிக பட்டபெந்தி மற்றும் அமைச்சு அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
ஜூன் 5ம் திகதி கேகாலை நகரத்தில், அநுர குமார திசாநாயக்க தலைமையில் தேசிய சுற்றுச்சூழல் தின நிகழ்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிகழ்வில் 'கேகாலை பிரகடனம்' எனப்படும் சுற்றுச்சூழல் அறிக்கையை ஜனாதிபதி வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.