யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
tamil news:
சம்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் இன்றையதினம்(30.05.2025) காலை ஏற்பட்ட யானை தாக்கிய சம்பவத்தில் 75 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
சம்பூர் காவற்துறை தெரிவித்ததின்படி,
உயிரிழந்தவர் மூதூர் - கட்டைப்பறிச்சான் பகுதியைச் சேர்ந்த சிவக்கொழுந்து இராசரெத்தினம்(வயது 75) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அவரின் வயலில் பணிக்குச் செல்லும்போது கணேசபுரம் பிரதான வீதியில் யானை தாக்கியுள்ளது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் கூறினர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது சம்பூர் காவற்துறை முன்னெடுத்து வருகின்றது.