இந்திய ட்ரோன் தாக்குதல்: பாகிஸ்தான் சூப்பர்லீக் போட்டிகள் கராச்சிக்கு மாற்றம்!
tamil news:
பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான பதற்றமான சூழ்நிலைகள் காரணமாக, பாகிஸ்தான் சூப்பர்லீக்(PSL) தொடரின் மீதமுள்ள போட்டிகள் ராவல்பிண்டி நகரத்தில் நடைபெறுவதற்குப் பதிலாக,
கராச்சியில் நடத்தப்படவுள்ளன என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
முன்னதாக வெளியான அட்டவணையின் படி,
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் முக்கிய போட்டிகளுக்கு என இருந்தது.
ஆனால் சமீபத்தில் லாகூர், குஜ்ரான்வாலா மற்றும் ராவல்பிண்டி ஆகிய பகுதிகளில் இந்திய ட்ரோன்கள் தாக்குதலை மேற்கொள்வதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்தில் ராவல்பிண்டி மைதானத்திற்கு அருகே ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து 10வது பாகிஸ்தான் சூப்பர்லீக் தொடரை ரத்து செய்யப்படலாம் என்ற வதந்திகள் கிளம்பினாலும்,
போட்டிகள் திட்டமிட்டபடி தொடரும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதியளித்துள்ளது.
