வெளிநாட்டு செய்திகள்

[வெளிநாட்டு செய்திகள்][bsummary]

சிறுகதைகள்

[சிறுகதைகள்][bigposts]

சினிமா

[சினிமா][bsummary]

புலனாய்வு செய்திகள்

[புலனாய்வு செய்திகள்][twocolumns]

வணிக செய்திகள்

[வணிக செய்திகள்][bsummary]

கட்டுரைகள்

[கட்டுரைகள்][bsummary]

மருத்துவ குறிப்பு

[மருத்துவ குறிப்பு][bigposts]

விளையாட்டு செய்திகள்

[விளையாட்டு செய்திகள்][bsummary]

திருகோணமலை மாநகரசபைக்கு புதிய மேயர் – கட்சியின் பரிந்துரை என்ன?


tamil news:

திருகோணமலை மாநகர சபையின் புதிய மேயராக கந்தசாமி செல்வராசா தெரிவாகியுள்ளார்.


இன்றையதினம்(28.05.2025) திருகோணமலை தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட குழுத் தலைவர் சண்முகம் குகதாசன் இதனைத் தெரிவித்தார்.


உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஒன்று கூடி,

ஜனநாயக முறையில் வாக்களித்து கந்தசாமி செல்வராசாவை மேயர் பதவிக்குப் பரிந்துரைத்துள்ளனர் என்று அவர் கூறினார்.


பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த கந்தசாமி செல்வராசா,

"என்னை மேயராக தெரிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.


திருகோணமலை மக்களின் நலனுக்காக நகர அபிவிருத்தித் திட்டங்களை சமநிலையான வளப் பங்கீட்டுடன் செயல்படுத்த முயற்சிப்பேன்.


எனது அனுபவத்தின் அடிப்படையில் எதிர்கால வளர்ச்சி திட்டங்களையும் திட்டமிட்டு முன்னெடுப்பேன்."

எனத் தெரிவித்துள்ளார்.