அமெரிக்கா: நாடுகடத்தப்படவுள்ள 3,000 இலங்கையர்கள்!
tamil news: அமெரிக்காவினால் நாடுகடத்தப்படவுள்ளவர்களின் பட்டியலில் சுமார் 3,000 இலங்கையர்களும் உள்ளனர் என அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.
2024 நவம்பர் 24ம் திகதிவரை நாடுகடத்துவதற்கான இறுதிஉத்தரவிற்காக காத்திருக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை சுமார் 3,065 என குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சட்டம், ஏனைய சவால்கள் காரணமாக அனைவரையும் உடனடியாக நாடுகடத்தமுடியாது.
புகலிடக்கோரிக்கைகள் காரணமாகவும் நாடுகடத்துவதில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அனைத்து நாடுகளும் அவர்களின் குடியுரிமை குறித்து ஆராயவேண்டும்இ பயண ஆவணங்களை வழங்கவேண்டும்,
நாடு கடத்தப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் வரும் விமானங்களை ஏற்கவேண்டும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்கஅமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடுகடத்தியவர்களுடன் வரும் விமானங்களை ஏற்கமறுக்கும் நாடுகளையும், அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்கஅமுலாக்கல் பிரிவு பட்டியலிட்டாலும் இந்த பட்டியலில் இலங்கை இடம்பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.