அத்தியாவசியமான 7 புற்றுநோய் மருந்துகள் இங்கு இல்லை!!!
tamil news: புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான 7 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2 வகையான வாய் மருந்துகளுக்கும் 5 வகையான தடுப்பூசிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் பதிவாளரும், இரத்தப்புற்றுநோய் நிபுணரான டாக்டர் புத்திக சோமவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(29.01.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மருந்துப்பதிவு, விநியோகம் மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பல சிக்கல்கள் இந்தப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதாக கலாநிதி புத்திக சோமவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையமும், மாநில மருந்து ஒழுங்குமுறைக்கழகமும் இணைந்து உரிய மருந்துகளை விரைவில் கொள்முதல் செய்துவருவதாக அவர் கூறினார்.
மேலும் இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கு 28 வாய்வழி மருந்துகளும், 33 ஊசி மருந்துகளும் இன்றியமையாதவை என விசேட வைத்தியர் டாக்டர் புத்திக சோமவர்தன கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
