ஊடக சுதந்திரம் உறுதி செய்யப்படவேண்டும்! சனாதிபதிக்கு கோரிக்கை
tamil news: இலங்கை சனாதிபதி ஊடக சுதந்திரத்தை உறுதிசெய்யவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதாவது,
24 சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து சனாதிபதிக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது,
"சனாதிபதியாக நீங்கள் தெரிவுசெய்யப்பட்டமைக்கு எங்கள் வாழ்த்துக்கள், இலங்கையின் அரசியலமைப்பினாலும், ICCPR இனாலும் பாதுகாக்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச்சுதந்திரத்திற்கான உரிமைகளை உறுதிசெய்யுமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.
ஊடக சுதந்திரத்தை உறுதிசெய்வது மற்றும் பத்திரிகையாளர்களிற்கெதிரான கடந்தகால குற்றங்களிற்கு பொறுப்புக்கூறலை உறுதிசெய்வது குறித்த தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதிகளை நாங்கள் வரவேற்கின்றோம்."
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டு;ளது.
மேலும்
"இதனடிப்படையில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் ஊடகவியலாளர்களிற்கெதிரான வன்முறைச்சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மீள ஆரம்பிக்கப்படவேண்டும், இந்த சம்பவம் குறித்து பொறுப்புக்கூறலிற்காக உடனடி பக்கச்சார்பற்ற வெளிப்படையான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்."
எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.