கடத்தப்பட்ட மாணவி அம்பாறையில் கண்டுபிடிக்கப்பட்டார்!
tamil news: கண்டி – தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட 19 வயது மாணவி அம்பாறை பேரூந்து நிலையத்தில் நின்ற பேரூந்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம்(13.01.2025) காலை கண்டி நோக்கி பயணிக்கவிருந்த அதிசொகுசு பேரூந்து ஒன்றிலிருந்து கடத்தலை மேற்கொண்ட நபரும் குறித்த மாணவியும் அடையாளம் காணப்பட்டனர்.
மேலும் அவர்களிடம் விசாரித்தநிலையில் அவர்கள் இருவரும் நேற்றிரவு அம்பாறையிலுள்ள விடுதியொன்றில் இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கடத்தலை மேற்கொண்ட குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதுடன் மாணவியிடம் வாக்குமூலம் பெறுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்