அரசசேவை சம்பள உயர்வு; சுமார் 90 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!
tamil news: அரசசேவை சம்பள உயர்வுக்காக எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம்(02.02.2025) தம்புத்தேகம பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் ஆனந்த விஜேபால அரசசேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் எதிர்வரும் வரவுசெலவுத்திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுமென நிதிஅமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் அடிப்படையில் தற்போதுள்ள சம்பள அளவுகளின்படி ரூபா 7,500 முதல் ரூபா 10,000 வரையிலான தொகை அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்