கிளிநொச்சி: கடலாமையுடன் ஒருவர் கைது!
tamil news: கிளிநொச்சி, முழங்காவில் காவற்துறை பிரிவிக்குட்பட்ட நாச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் கடலாமையுடன் ஒருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபர் நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவர் என்பதால் முழங்காவில் காவற்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முழங்காவில் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்