மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையைச் சேர்ந்த மாணவி கலைப்பிரிவில் முதலிடம்!
tamil news:
2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்றையதினம்(26.04.2025) வெளியாகியுள்ளன.
இதில் மன்னார் கல்விவலயத்தைச் சேர்ந்த சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி, கலைப்பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்திலே முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
அத்துடன் தேசிய ரீதியிலும் 84வது இடத்தைப் பிடித்து மன்னார் மாவட்டத்தின் பெருமையை மிகைப்படுத்தும் வகையில் ஒரு சிறப்பான சாதனையை உருவாக்கியுள்ளார்.
Labels:
உள்நாட்டுச் செய்திகள்