G.C.E A/L உயிரியல் விஞ்ஞானத்தில் இரட்டையர்கள் சாதனை!
tamil news:
2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியைச் சேர்ந்த இரட்டையர் மாணவர்கள் மாவட்டரீதியில் முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளனர்.
அதன் மேல் தேசிய மட்டத்திலும் அவர்கள் சிறந்த இடத்தை பதிவுசெய்துள்ளனர்.
இதில் சி. ஜமுனானந்தா பிரணவன் தேசிய ரீதியில் 3ஆம் இடத்தையும்,
சி. ஜமுனானந்தா சரவணன் 5ஆம் இடத்தையும் பெறும் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
இவ்விருவரும் உயர் தரத்தில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் சிறந்து விளங்கியுள்ளனர்.
மேலும் இவர்களின் தந்தை யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக பணியாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.