இன்றைய வானிலை குறித்த முன்னறிவிப்பு
weather update:
தென்மேற்கு பருவமழையின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளநிலையில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தற்போது காணப்படும் மழை நிலைமைகள் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மேல், சப்ரகமுவ, நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களில் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டரை அதிகமாகும் கனமழை பதிவாகலாம்.
நாட்டின் பிற பகுதிகளில் சிலவகை மழைவீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில் மத்திய மலைநாட்டு மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை நேரத்தில் தற்காலிகமாக கடுமையான காற்று மற்றும் மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதால்,
பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
