வவுனியா: விசேட அதிரடிப்படை வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு!!!
tamil news:
வவுனியா ஓமந்தை பகுதியில் இன்றையதினம்(15.05.2025) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,
மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்தின்போது விசேட அதிரடிப் படையினரின் வாகனம் ஒரு மோட்டார் சைக்கிளுடன் மோதித்தள்ளியதாக கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய கண்ணதாசன் திவியன்(32 வயது) என்பவர் பலியானார்.
விபத்துக்குள்ளானபோது பாதையில் இருந்த மற்றும் ஒருவரையும் அந்த வாகனம் மோதி உள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதனைத்தொடர்ந்து இருவரும் மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,
திவியன் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
அதேசமயம் விபத்து சம்பவத்திற்குப் பிறகு,
விசேட அதிரடிப்படை சார்ந்த வாகனம் அந்த இடத்தை விட்டு செல்லமுற்பட்டதாகவும்,
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து காவற்துறையினர் முன்னெடுத்து வருவதாகவும் காவற்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.