வவுனியா சிறைச்சாலை கைதி மீது கடும் தாக்குதல் – தீவிர சிகிச்சையில் அனுமதி!!!
tamil news:
வவுனியா சிறைச்சாலையில் நிகழ்ந்த கடுமையான தாக்குதல் சம்பவத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு சிறைக்கைதி படுகாயமடைந்துள்ளார்.
அதாவது உடுவில் பகுதியை சேர்ந்த சிவபாலன் லக்சன் என்பவர் சிறைக்காவலர்களால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த 15ம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தையடுத்து,
அவர் வவுனியா பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கைதியின் குடும்பத்தினர் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அதிகாரப்பூர்வ முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான தகவலை வெளியிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என கைதிக்கு சிறைக்காவலர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
