உலக கவனத்தை பெற்ற முக்கிய சந்திப்பு: ஜெலன்ஸ்கி – புடின் பேச்சுவார்த்தை துருக்கியில்!!!
tamil news:
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போருக்கு முடிவுகாணும் நோக்கில் இரு நாட்டு தலைவர்களும் நேரடியாக சந்திக்க உள்ளனர்.
இந்த வரலாற்றுச் சந்திப்பு வருகின்ற வியாழக்கிழமை(15.05.2025) துருக்கியின் தலைநகர் இஸ்தான்புலில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கான மேடையை துருக்கி ஏற்பாடு செய்துள்ளநிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நேரடி கலந்துரையாடலை முன்மொழிந்ததாக கூறப்படுகின்றது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டது தொடர்பாக சமூக ஊடகத்தளமான ‘X’-இல் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
"இன்னும் மக்கள் உயிரிழப்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
நான் துருக்கியில் புடினை சந்திக்க தயாராக இருக்கின்றேன்."
என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
அத்துடன் இந்த சந்திப்பில் ரஷ்யா எந்தவொரு முந்தைய தடைகளெதுமின்றி போர்நிறுத்தத்திற்கு முன்வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


